How to Claim Form -10C | PF Pension Withdrawal in Tamil
தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டத்தில் இருந்து Form-10C -யை பயன்படுத்தி Pension Withdrawal Benefit-யை பெறலாம். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த Pension தொகையை Withdrawal செய்ய முடியும். இதனை பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.
EPF-ல் உறுப்பினராக இருக்கக்கூடிய தொழிலாளர்களின் மாத சம்பளத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட தொகை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) வரவு வைக்கப்படுகிறது. அதே அளவு சம பங்கு தொகையை நிறுவனத்தின் சார்பிலும் வரவு வைக்கப்படும்.
இதில் நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும் தொகையில் ஒரு சிறிய பகுதியை Employee Pension Scheme (EPS) என்னும் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த EPS திட்டத்தில் செலுத்தப்படும் பணமானது, தொழிலாளர்களின் ஒய்வு காலத்தில் மாத ஓய்வூதியம் (Monthly Pension Amount) பெறுவதற்கு பயன்படுகிறது.
மாத ஓய்வூதியத்தை பெறுவதற்கு பணியாளர்களின் சேவைக்காலம் குறைந்தபட்சம் 10 வருடங்களாவது இருக்க வேண்டும். ஆனால் 10 வருட சேவைக்காலத்தை நிறைவு செய்த பின்னர், EPS திட்டத்தில் உள்ள பணத்தை திரும்ப பெற இயலாது.
Table of Contents
Employee Pension Scheme இல் உள்ள பணத்தை Withdrawal செய்ய நிபந்தனைகள்
EPS திட்டத்தில் உள்ள பணத்தை Withdrawal செய்வதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணத்தை திரும்ப பெறலாம். நீங்கள் EPS திட்டத்தில் உள்ள பணத்தை எடுத்துவிட்டால் உங்களின் சேவைக்காலத்தை (Service Years) இழக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
- பணியாளர்கள் 10 வருட சேவையை முடிப்பதற்கு முன்பு, வேலையை விட்டு வெளியேறி இருக்க வேண்டும்.
அல்லது
- 10 வருட சேவையை முடிப்பதற்கு முன்பு 58 வயதை எட்டியிருக்க வேண்டும்.
- ஏனெனில் பணியாளர்கள் 10 வருட சேவையை நிறைவு செய்த பின்னர் அவர்கள் மாத ஓய்வூதிய தொகையை பெற தகுதியுடையவராக ஆகிறார். எனவே அப்போது EPS திட்டத்தில் உள்ள பணத்தை திரும்ப பெற முடியாது.
- ஒரு பணியாளர் 10 வருட சேவையை முடிப்பதற்கு முன்னர், வேலையில் இருந்து வெளியேறி 2 மாதங்கள் வரைக்கும் எந்த நிறுவனத்திலும் சேராமல் இருந்தால் EPS தொகையை Withdrawal செய்யலாம்.
- 58 வயதை எட்டிய பின்னர் உறுப்பினர் இறந்துவிட்டால், குடும்ப உறுப்பினர்கள் Form-10C -யை பயன்படுத்தி உறுப்பினரின் EPS திட்டத்தில் உள்ள பணத்தை எடுக்கலாம். ஆனால் உறுப்பினரின் சேவை காலம் 10 வருடங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
How to Claim Form -10C Online
Form-10C -யை Online மூலம் Claim செய்து EPS திட்டத்தில் உள்ள பணத்தை திரும்ப பெறலாம்.
Step 1: முதலில் EPF Member Portal-ல் உங்களின் UAN கணக்கை Sign In செய்ய வேண்டும்.
Step 2: உங்களின் UAN கணக்கை Login செய்தவுடன், Online Services என்பதை கிளிக் செய்யும்போது வரும் Option-களில் Claim (Form-31, 19, 10C & 10D) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Step 3: KYC Details-ல் உள்ள Bank Account No என்னும் இடத்தில் உங்களின் வங்கிக்கணக்கு எண்களை Enter செய்து Verify என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: இப்பொழுது ஒரு Pop Up Window தோன்றும். அதில் Yes என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 5: பிறகு கீழே தோன்றும் Proceed For Online Claim என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 6: இப்போது Claim Form-யை தேர்வு செய்யும் Option வரும். அதில் I want to apply for என்ற இடத்தில் ONLY PENSION WITHDRAWAL (FORM-10C) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 7: Employee Address மற்றும் Scanned passbook போன்ற தகவல்களை அளிக்க வேண்டும்.
Step 8: Check Box-யை டிக் செய்தவுடன் தோன்றும் Get Aadhaar OTP என்ற பட்டன் கிளிக் செய்ய வேண்டும்.
Step 9: இப்பொழுது Aadhaar Number-ல் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு OTP வரும். OTP எண்ணை உள்ளிட்டு Validate OTP and Submit Claim Form என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 10: நீங்கள் Claim செய்த Form ஆனது வெற்றிகரமாக Submit செய்யப்பட்டிருப்பதை காணலாம்.
How to Check Form 10C Claim Status
நீங்கள் Form 10C யை Claim செய்த பிறகு அதன் Status யை கீழ்கண்ட முறையில் அறியலாம்.
Step 1: UAN கணக்கை Login செய்து Online Services > Track Claim Status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 2: தற்போது நீங்கள் Claim செய்த Form-ன் நிலையை அறியலாம்.
நீங்கள் PF Form யை Claim செய்த பிறகு 15 – 20 நாட்களுக்குள் Pension பணமானது உங்களின் UAN கணக்கில் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் Credit செய்யப்படும்.
இதையும் படியுங்கள் |
Frequently Asked Questions (FAQ)
Pension Amount யை Withdraw செய்ய எந்த Form யை Claim செய்ய வேண்டும்?
Form 10C யை பயன்படுத்தி பென்ஷன் திட்டத்தில் உள்ள பணத்தை எடுக்கலாம்.
Online அல்லது Offline இதில் எந்த முறையில் Apply செய்ய வேண்டும்?
Online மூலம் மட்டுமே Apply செய்ய வேண்டும்.
மொபைல் மூலம் PF பென்ஷன் பணத்திற்கு கிளைம் செய்ய முடியுமா?
முடியும். UMANG என்ற மொபைல் செயலி மூலம் Withdraw செய்யலாம்.
PF Pension Amount யை வங்கிக்கணக்கில் போடுவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்?
சுமார் 15 முதல் 20 நாட்கள் வரை ஆகும்.